×

பாலியல் தொல்லை புகார் கொடுத்ததால் ஆத்திரம்: நடிகை ஸ்ரீரெட்டியை வீடு புகுந்து தாக்கிய தயாரிப்பாளர் உள்பட 2 பேர் கைது

சென்னை: வளசரவாக்கத்தில் நடிகை ஸ்ரீரெட்டியை வீடு புகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சினிமா தயாரிப்பாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெலுங்கு சினிமாவில் படவாய்ப்புக்காக நடிகைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தும் வழக்கம் இருக்கிறது எனவும் பட வாய்ப்பு தருவதாக கூறி திரையுலகினர் தன்னை பயன்படுத்திக் கொண்டனர் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. இதற்காக அரைநிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் வசித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. நேற்று முன்தினம்  இரவு ஸ்ரீரெட்டி வீட்டுக்கு 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரெட்டி மற்றும் அவரது மேலாளர் மோகன் ஆகியோரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். காயமடைந்த ஸ்ரீரெட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

 இதுகுறித்து கோயம்பேடு போலீசில்ஸ்ரீரெட்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், நடிகையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது சென்னை வளசரவாக்கம் நடேசன் தெருவை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சுப்பிரமணி (40), அவரது அக்கா மகன் கோபி (23) என்பது தெரியவந்தது. ஏற்கனவே சுப்பிரமணி ஐதராபாத்தில் 3 மாதத்துக்கு முன்பு ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து  ஸ்ரீரெட்டி போலீசில் புகார் செய்துள்ளார். இதனால், சுப்பிரமணி ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் அவர் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணியும் கோபியும் ரெட்டி வீட்டுக்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Srirti , Sexual harassment, actress Srirty, producer, 2 arrested
× RELATED அஜித்தை ஒருதலையாக காதலிக்கிறேன் - நடிகை ஸ்ரீரெட்டி