×

பெண் ஐ.டி. ஊழியரிடம் சில்மிஷம்: பீகார் வாலிபர் கைது

சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் வளசரவாக்கத்தை சேர்ந்த பெண் ஐ.டி ஊழியர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த டேனிஷ் (20) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* கொளத்தூர் சத்ய சாய் நகரை சேர்ந்த கலைச்செல்வி (53). நேற்று முன்தினம்  இரவு வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில்  வந்த 2 பேர், கலைச்செல்வி கழுத்தில் கிடந்த 9  சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பினர்.
* பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஜமீன் பல்லாவரம், ராஜாஜி நகர் ரோசையா (24), பல்லாவரம் வடக்கு சஞ்சய் காந்தி நகர் ஹரிஹரன் (21), ஜமீன் பல்லாவரம், பாரதி நகர் மெயின் ரோடு சஞ்சய் (எ) குடிப்புலி (18), குரோம்பேட்டை கன்னியம்மன் நகர் சதீஷ்குமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bihar , Female, Bihar, youth arrested
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!