×

பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் : மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி : பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டம்  


 பாகிஸ்தான் தேசிய தினம் வருகிற மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் அதற்கான முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்த விழாவில் பங்கேற்பதற்காக சீனா தனது போர் விமானங்களை பாகிஸ்தானிற்கு அனுப்பி வைத்தது. எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இந்தியாவின் எதிரி நாடுகளான பாகிஸ்தான் சீனா இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. இதனால் தேசிய தினத்தில் பங்கேற்க வந்த சீன போர் விமானிகளுக்கு  பாகிஸ்தானில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு

இந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும் பாகிஸ்தான் தூதரகம் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. ஏற்கனவே, புல்வாமா தாக்குதல் விவகாரம் நடந்ததில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் உறவு பதட்டமாக இருக்கும் இந்த நிலையில் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டி விடுவது போலான இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறது பாகிஸ்தான். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் தேசிய தின கொண்டாட்டத்தில் இந்திய பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகியது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : delegates ,Indian ,celebrations ,Pakistan National Day ,Central Government ,
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்