×

ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதையடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதையடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 10.50 மணிக்கும், வேளச்சேரி-சென்னை கோட்டை இடையே 11.25 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல், மார்ச் 31ம் தேதி சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இரவு 11.45 மணிக்கும், வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே இரவு 11.25 மணிக்கும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : matches ,IPL , IPL competition, Chepauk, electric trains
× RELATED லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி