×

பெரிய கார்பரேட் முதலாளிக்கு தான் மோடி காவலன் பிரதமரா இருந்துகிட்டு சொன்னத எதையாச்சும் நிறைவேற்றியிருக்காரா? கே.பாலகிருஷ்ணன் பேச்சு

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: நான் காவலன் என்று மோடி கூறியிருக்கிறார். அவர் யாருக்கு காவலன். மோடி ஊழலில் ஈடுபடவில்லையா? இன்னைக்கு இந்திய நாட்டை பாதுகாப்பதற்காக ரபேல் என்ற போர் விமானத்தை வாங்கினீர்களே. 526 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டிய விமானத்தை ஆயிரத்து 600 கோடி ரூபாய் போட்டு வாங்கியிருக்கிறீர்களே.  இவ்வளவு அதிகமான விலை ஏன் வந்தது. ஒரு விமானத்துக்கு இரண்டு மடங்கு விலை கொடுத்தீர்களே எதனால கொடுத்தீர்கள். அந்த பணம் யாருக்கு போய் சேர்ந்தது. இதுதானே இன்றைக்கு நடந்து கொண்டிருக்கிறது. நான் என்ன கேட்கிறேன்னா?. நீங்க இந்த அஞ்சு வருஷத்துல கொடுத்த வாக்குறுதிய ஏதாச்சும் நிறைவேத்தினீங்களா. ஒரு விஷயத்துல மட்டும் பாராட்டினுங்க. மோடி மாதிரி ஒரு அதிபுத்திசாலிய நீங்க பாக்க முடியாது.

வெளிநாட்டுல போட்டிருக்கிற கருப்பு பணத்த எல்லாம் நாங்க பறிமுதல் பண்ணி, ஒவ்வொருத்தரோட பேங்க் அக்கோண்ட்ேலயும் 15லட்சம் ரூபா போடுவேன்னு சொன்னா தான் ஜனங்கள கவர முடியும்னு சொல்லி அத சொன்னாரு. அன்னைக்கு ராத்திரி பத்தே கால் மணிக்கு தொலைகாட்சிய பாத்த நம்ம ஆளுகளுக்கு, ஏன்.. இந்தியால காஷ்மீர்ல இருந்து கன்னியாகுமரி வரைக்கு ராத்திரி பூரா யாருக்குமே தூக்கமே வரல. அய்யோ.. 15லட்சம் வாங்கினா எங்க போய் வெக்கிறது. அவங்களுக்கும் புரியல. இந்த 15லட்சத்த வச்சிக்கிட்டு. இத எதற்காக சொல்றேன்னு சொன்னா. ஒரு நாட்டோட பிரதமர் சொல்லியிருக்கிற எதையாவது நிறைவேற்றியிருக்காரா?.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : boss ,Modi , Mod, Prime Minister, K.Balakrishnan
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...