×

மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தனி சின்னத்தில் போட்டி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோட்டில் போட்டியிடும் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தனிச்சின்னத்தில் போட்டியிடுவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியுள்ளது. இதில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன. வேட்பாளர் பட்டியல் அறிவிப்புக்கு பிறகு திமுக மற்றும்  அதனுடன் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
 
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளராக அ.கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். இவர் தனி சின்னத்தில் போட்டியிடுவர் என வைகோ அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிற மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தொகுதி தேர்தல் அதிகாரி ஒதுக்குகின்ற தனி சின்னத்தில் போட்டியிடுவார்.  இவ்வாறு கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ganesha , Mdmk candidate, Kanesamoorthy
× RELATED கிழமைகள் தரும் கீர்த்தி