×

எம்ஜிஆர் சம்பாதித்ததில் சாப்பாடு போட்டார் எடப்பாடி கொள்ளையடித்ததில் கொஞ்சம் கொடுத்தார்... ராமதாசின் வேறவாய்

பாமக  நிறுவனர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சேலம் வந்தார். அப்போது  அவர் எழுதிய, ‘100 வினாக்கள், விடைகள்’’ என்ற சிறிய புத்தகம் ஒன்று கட்சி  நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. அதில் 96வது கேள்வியை படித்ததும் அவர்களில் சிலருக்கு சிரிப்பு வந்துவிட்டது. நீங்களும் தான் படியுங்களேன் கேள்வி: எம்ஜிஆரின் ராமாவரம் ேதாட்டத்தை போலவே எடப்பாடி பழனிசாமியின் சென்னை  இல்லத்திலும் பொதுமக்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறதாமே?  அதனால் அவரும் ஒரு வள்ளலாமா?

பதில்: புலியை பார்த்து பூனை சூடு  போட்டுக்கொண்ட கதை தான். எம்ஜிஆர் அவரது ராமாவரம் தோட்டத்தில்  திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பணத்தைக்கொண்டு தமது இல்லத்திற்கு  வருவோருக்கு அறுசுவை உணவு படைத்தார். அது பாராட்டத்தக்கது. ஆனால் எடப்பாடி  பழனிசாமி அப்படியல்ல. மக்களிடமிருந்து மொத்தமாக கொள்ளையடித்த பணத்தில்  ஒரு பகுதியை எடுத்துத்தான் உணவு படைக்கிறார். இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MGR ,exit ,Ramadoss , MGR ,earning money , robbery
× RELATED பேட்டை எம்ஜிஆர் நகரில் அடிப்படை வசதி...