×

சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

சென்னை: சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்துள்ளார்.  2019 பேரவை தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கனகராஜ் வெற்றி பெற்றார். தற்போது  சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால் சட்டப்பேரையில் எம்.எல்.ஏக்களின் காலியிடம் 22-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 21 தொகுதிகள் காலியாக இருந்த நிலையில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி தொகுதியுடன் சூலூர் தொகுதியும் தற்போது காலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கனகராஜ் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான கனகராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.201-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கனகராஜ், அத்தொகுதி மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்தார். மனதில் உள்ளதை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசும் வழக்கம் கொண்டவர். இதற்கு முன் மாவட்ட ஊராட்சித் தலைவராக பதவி வகித்த போது பல்வேறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்றி மக்களிடம் பாராட்டு பெற்றவர் கனகராஜ். கனகராஜின் மறைவு சூலூர் தொகுதி மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ramadoss ,death ,constituency ,Kanakaraj ,Chullor , Sulur, MLA, Kanakaraj's death, Ramadoss's mourning
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...