×

நாமக்கல் அருகே நகை செய்து தருவதாக கூறி மோசடி செய்த இருவர் கைது

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு பகுதி நகை கடைகளில் நகை செய்து தருவதாக கூறி தங்கத்தை பெற்று ரூ.5.70 கோடி மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சங்கோடு கிழக்கு ரத வீதியில் உள்ள நகை கடையில் நகைகளை செய்து தருவதற்காக குட்டப்பள்ளியை சேர்ந்த பாலமுருகன் என்பவர்.ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பெற்று ஏமாற்றி சென்றுள்ளார்.

இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவாக இருந்த பாலமுருகன் கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் இவரின் மைத்துனர் அருண்குமாருடன் சேர்ந்து இது போன்று 18-க்கும் மேற்பட்ட கடைகளில் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : men ,Namakkal , Two men ,arrested , cheating, Namakkal
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்