×

பெரிய மோடி தூங்கிக்கொண்டிருந்த போது சிறிய மோடி தப்பிவிட்டார்...காங்கிரஸ் கட்சி விமர்சனம்

டெல்லி: பெரிய மோடியான நரேந்திர மோடி தூங்கிக்கொண்டிருந்த போது சிறிய மோடியான நிரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பிவிட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இங்கிலாந்தில் தொழிலதிபர் நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விமர்சனத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

ரூ.20,306 கோடி கொள்ளையடித்த நிரவ் மோடி 2018 ஆண்டு நாட்டை விட்டு தப்பியதாக சுர்ஜேவாலா கூறியுள்ளார். அதே ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி சுவிச்சர்லாந்து சென்ற போது அவருடன் நின்று நிரவ் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். 2018 நவம்பர் வரை உலங்கெங்கும் சுற்றி கொண்டிருந்த நிரவ் மோடி, அதற்கு பிறகு லண்டனுக்கு சென்றதாகவும் அங்கு அவர் சுற்றி திரிவதை அந்த நட்டு பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதாகவும் அதற்கு பிறகு நிரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுர்ஜேவாலா கூறியுள்ளார். இவ்வளவு காலமாக நடவடிக்கை எடுக்காமல் பெரிய மோடி தூங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Little Modi , Little Modi ,escaped ,Modi, Congress Party ,Review
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...