×

தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் இடம் : பள்ளபட்டி மருத்துவமனைக்கு விருது வழங்கி பாராட்டு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக மத்திய அரசின் காயகல்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் அரசு மருத்துவமனைக்கு காயகல்பு விருது வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில் தூய்மை, சுகாதாரம், மருத்துமனையை நோய் தொற்று ஏற்படாத பகுதியாக பாதுகாத்தல், கழிவு நீர் மற்றும் மருத்துவக் கழிவுகளை முறையாகவும், பாதுகாப்பாகவும் வெளியேற்றுதல், நோய் தாக்குதல் மற்றும் அதிலிருந்து பாதுகாத்தல் பற்றி பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்ட பொதுமக்கள் கூடுமிடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட தூய்மை இந்தியா திட்டத்தின் பல்வேறு நிலைகளை அரவக்குறிச்சியை அடுத்த பள்ளபட்டி அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுத்தியது.

இதனை நேரடியாக ஆய்வு செய்த ஆய்வுக் குழுவினர் தூய்மை இந்திய திட்ட குழுவினருக்கு பரிந்துரைத்ததின் அடிப்படையில் பள்ளபட்டி அரசு மருத்துவமனை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக மத்திய அரசின் காயகல்பு விருது வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பள்ளபட்டி அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குனர் விஜயகுமார், டாக்டர் ராமராஜ் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த திட்டம் சிறப்பாக செயல்பட உறுதுணையாக இருந்து பல்வேறு வகையில் உதவி செய்த  கொடையாளிகள் தோட்டம் சாதிக், கல்யாணி அனிபா, லோகநாதன், பாப்புலர் அபுதாகீர் உள்ளிட்டவர்களுக்கு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் விஜயகுமார் சால்வை அணிவித்து பாராட்டினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pallapatti Hospital , Purity India, Pallapatti, Hospital
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...