×

தர்மபுரி தொகுதியில் 200வது முறை தேர்தல் மன்னன் பத்மராஜன் மனுதாக்கல்: தோல்வி அடைவதற்காகவே போட்டி என்கிறார்

சேலம் மாவட்டம், மேட்டூர் குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன்(60). இவர், கடந்த 1988 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டதில் இருந்து தனது தேர்தல் பயணத்தை துவங்கினார். 64 முறை எம்எல்ஏ தேர்தல்களிலும், 40 முறை  மக்களவை தேர்தல்களிலும், 29 முறை மாநிலங்களவை தேர்தல்களிலும், 5 முறை ஜனாதிபதி தேர்தல்களிலும், 5 முறை துணை ஜனாதிபதி தேர்தல்களிலும், 2 முறை எம்எல்சிக்கும், ஒரு முறை சேலம் மேயர் தேர்தலிலும், 3  முறை ஒன்றிய சேர்மனுக்கும், 2 முறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 12 முறை கவுன்சிலருக்கும், 4 முறை வார்டு உறுப்பினர் பதவிக்கும், 31 முறை கூட்டுறவு இயக்குனர் பதவிக்கும் என இதுவரை மொத்தம் 199 முறை  தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார்.

இவர் 2011 மேட்டூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அதிகபட்சமாக 6 ஆயிரத்து 273 ஓட்டுக்கள் வாங்கியுள்ளார். தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகம் வந்த  பத்மராஜன், முதல் ஆளாக தனது வேட்பு மனுவை கலெக்டர் மலர்விழியிடம் தாக்கல் செய்தார். பத்மராஜன் நிருபர்களிடம் கூறுைகயில், ஒரு காலத்திலும் நான் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதுதான் எனது லட்சியம். என்னால் ஒரு காலத்திலும் ஜெயிக்க முடியாது. ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் அதை  என்னால் தாங்க முடியாது.  டெபாசிட் தொகையாக ₹30 லட்சம் வரை செலவிட்டுள்ளேன்். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Dharmapuri ,Pathamarajan ,Competition , 200th time,Dharmapuri, constituency,Pathamarajan ,competition
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்