×

கடலில் குளித்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் பரிதாப சாவு

கடலூர்:  கடலூர் கடற்கரை சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 12ம் வகுப்பு உயிரியல் படித்த மாணவர்கள் தங்களது அரசுப் பொதுத்தேர்வின் கடைசி தேர்வை நேற்று எழுதினர். தேர்வுக்குபின், மாணவர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு 5 பேர் குளித்துக் கொண்டிருந்த நிலையில், சிலர் கடற்கரையில் அமர்ந்திருந்தனர்.

திடீரென மாணவர்களை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதனால், கரையில் அமர்ந்திருந்தவர்கள் கூச்சலிடவே மீனவர்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தனுஷ் (17), விக்னேஷ் (17), ஸ்ரீஹரி (17), பரணிகுமார் (17) ஆகியோர் பலியாகின ர். அபினேஷ் (17), என்பவருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : sea , sea, Plus 2, student, dead
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!