×

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திட திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100% உழைத்திட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உழைத்திடுவீர். நாற்பதுக்கு 40, பதினெட்டுக்கு 18 என 100 சதவீதம் வெற்றிக்காக வேறு சிந்தனையின்றி உழைத்திடுவீர் என கோரியுள்ளார். மேலும் அவர் எழுதியுள்ள கடித்தில் களத்தில் ஓயாது உழைத்திடுவோம். கருணாநிதியின் காலடியில் வெற்றியைக் காணிக்கை ஆக்கிடுவோம் என்று ஸ்டாலின் கழக உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உங்களின் ஆதரவுடன் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காக மக்களவையில் என்றும் குரல் கொடுப்போம். திமுக மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தரும் அரசியல் இயக்கங்கள், அமைப்பினருக்கு நன்றி என தெரிவித்துள்ளார். வெற்றிக்கான களம் தயாராகி விட்டது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களப்பணி தொடங்கி விட்டது. 2019 மக்களவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையும், 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது.

இனி நமது ஒற்றை இலக்கு, மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்துகொண்டு மக்களை வதைக்கிற பாசிச – மதவெறி – ஊழல் மய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்துவது ஒன்றுதான். எளிமையாகச் சொல்வதென்றால், தமிழகம் - புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிற சட்டமன்றத் தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையாக வெற்றிபெற உழைப்பது ஒன்றே நமது இலக்கு என குறிப்பிட்டுள்ளார்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Stalin ,volunteers ,DMK , DMK, Stalin, letter
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...