×

மக்களவை தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 750 பேர் கைது

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை காவல்துறை பாதுகாப்பில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்த்து 7,790 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 450 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுவரை நான்கு கம்பெனி துணை ராணுவம் சென்னைக்கு வந்துள்ளதாகவும் இன்னும் 16 கம்பெனி துணை ராணுவம் முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்ததும் வர உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சென்னையில் மொத்தம் 2,700 உரிமம் பெற்ற துப்பாக்கிகளில் 1,230 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகள் மீது 72 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Lok Sabha, election, precaution, action in Chennai arrested 750
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...