×

பாகிஸ்தான் துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் பலி

ஜம்மு: காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர்  காயமடைந்தனர். காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் 2வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. அதிகாலை 5.30 மணியளவில் மார்டர் ரக குண்டுகள், சிறிய ஆயுதங்கள் மூலமாக தாக்குதலை பாகிஸ்தான் தொடங்கியது. கேரி பட்டால் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது. எனினும் பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.

கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது 26ம் தேதி  இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pakistani ,gunman ,shooter ,Indian , Pakistan, gunfire, Indian warrior, kills
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு