×

ரஷ்யாவில் கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவு

மதுரை: ரஷ்யாவில் கப்பல் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்களிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து, காணாமல் போனவர்கள் தப்பி வந்தது எப்படி என்பது பற்றி விசாரிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு கப்பலில் பணிபுரிந்தவர்கள் காயமடைந்தால் அல்லது உயிரிழந்தால் வழங்கப்படும் இழப்பீடு எவ்வளவு? என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 21ல் ரஷ்யா அருகே கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் 4 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது. கப்பல் விபத்தில் காணாமல் போன 4 இந்தியர்களையும் மீட்க உத்தரவிடக் கோரி ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கினை மார்ச் 27ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indians ,Russia , The investigation, ordered, Russia, shipwreck
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...