சென்னை : சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கில் சிபிசிஐடி முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மேலும் 17 தனிப்படைகள் அமைத்து 251 சாட்சிகள் அடிப்படையில் முகிலன் வழக்கை விசாரித்து வருவதாக உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல் அளித்துள்ளது. இதையடுத்து அடுத்த விசாரணை அறிக்கையை ஏப்.,8ம் தேதி தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி