×

மக்கள் நீதி மய்ய நிர்வாகி சி.கே.குமாரவேல் ராஜினாமா ஏற்பு : செய்தித்தொடர்பாளர் தகவல்

சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் கடலூர், நாகை பொறுப்பாளர் சி.கே.குமாரவேல் கட்சியிலிருந்து விலகுவதாக கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அவரது ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தகவல் அளித்துள்ளார். நேர்காணலுக்கு கூட வராமல், தேர்தலில் தான் கடலூர் தொகுதியில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வு முறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என விளக்கமளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CK Kumaravel , People's Justice, CK Kumaraswam, resignation, spokesperson, Kamal
× RELATED மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து...