×

டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் என்பவர் இரண்டு வழக்குகளை தொடர்ந்திருந்தார். டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும், குட்கா விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வழக்கு தெரிவித்திருந்தார். அதே சமயம் டிஜிபி ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டதை தடுக்காத தலைமை செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டாவது வழக்கும் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சசிதரன் ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அதில் தீர்ப்பானது கடந்த ஜனவரி மாதம் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கில் சென்னையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். விரிவான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிஜிபி ராஜேந்திரன் பணி நீட்டிப்பு செய்ததை  எதிர்த்த மனுவும், தலைமை செயலாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DGP Rajendran ,Madras High Court , DGP Rajendran, Work Extension, Discount, Chennai High Court
× RELATED பா.ஜ.க. நிர்வாகி அகோரம் ஜாமின் மனுவை...