×

ஏப்., 18ம் தேதி மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் : சத்யபிரதா சாஹூ

சென்னை : வரும் ஏப்., 18ம் தேதி தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் மதுரையில் பிரதிப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளதால், தேர்தல் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார். மதுரை சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voting ,constituency ,Lok Sabha ,Madurai ,Satyabrata Sahu , Lok Sabha election, Madurai block, Chithra festival, polling, Satyabrata Sahu
× RELATED மக்களவை தேர்தல்: கர்நாடகாவில் 51% வாக்குப்பதிவு