சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தி வேதாரண்யம், பெரியகுளம், திருத்துறைப்பூண்டி, செய்யாறு, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புதுச்சேரி மாநில வழக்கறிஞர்கள் சங்கம் சார்பிலும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் 16 நீதிமன்றத்தில் 800 வழக்கறிஞர்கள் பணிக்கு செல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி