×

ஒழுங்கு நடவடிக்கை மனு விரைந்து முடிக்க உத்தரவு

மதுரை: நெல்லையை சேர்ந்த ஜான்சன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘1982 முதல் விஏஓ ஆக பணிபுரிந்து வந்தேன். 7.7.2004ல் என்னை சஸ்பெண்ட் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து 29.4.2005ல் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடம் மேல்முறையீடு செய்தேன். இந்நிலையில் 31.01.2012ல் ஓய்வு பெற்றேன். எனது மனுவை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், ‘‘தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியிடம் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு மனுக்களை அந்தந்த காலக்கெடுவிற்குள் விரைந்து முடிக்க தமிழக தலைமைச்செயலர் அந்தந்த அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி, விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Order action petition The order to complete the rush
× RELATED பெண் போலீஸ் ஏட்டு தற்கொலை