×

கோவளம் கடலில் குளித்த அமெரிக்க சுற்றுலா பயணி பலி

திருவனந்தபுரம்: கோவளத்தில் கடல் அலையில் சிக்கிய அமெரிக்க சுற்றுலா பயணி பரிதாபமாக இறந்தார். திருவனந்தபுரம், கோவளம் கடற்கரை சர்வதேச சுற்றுலா தலமாகும். இந்த கடல் அழகை ரசிக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நேற்று முன்தினம் அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீபன் வால்ட் ரிச்டர் (72) வந்திருந்தார்.

மாலையில் கோவளம் லைட் ஹவுஸ் கடல்பகுதியில் குளித்து கொண்டிருந்தார். அப்ேபாது அலையில் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்டீபன் வால்ட் இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : tourist ,American ,sea ,Kovalam , Kovalam beach, American, tourist killed
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...