சென்னை: மக்களவை தேர்தலில் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விரும்புவோர் கழகத்தலைவர் டி.ராஜேந்திரனிடம் விருப்பமனு அளித்தனர். முன்பு நான் சத்திரியன்; இப்போது நான் விவேகமான சாணக்கியன்; யோசித்துதான் முடிவு எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இன்றைய அரசியலில் அறிவாளி, உழைப்பாளி, போராளி என நினைத்தால் ஏமாளியாகி விடுவார்கள் எனவும் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். ஒரு பெரிய கட்சி அவர்களது சின்னத்தில் நிற்க கூறியதால் அதை ஏற்க மறுத்து விட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி