×

நடிகை ராகிணி திவேதி முன்னிலையில் முன்னாள்-இந்நாள் காதலர்கள் மோதல்: பெங்களூரு ஓட்டலில் பரபரப்பு

பெங்களூரு: நடிகை ராகிணி திவேதி முன்னிலையில் அவரது முன்னாள் மற்றும் இந்நாள் காதலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெங்களூரு ஓட்டலில் நடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கெம்பேகவுடா, வீரமதகரி, ராகிணி ஐபிஎஸ் உள்ளிட்ட கன்னட படங்களிலும், தமிழில் நிமிர்ந்து நில் படத்திலும் நடித்தவர் ராகிணி திவேதி. இவருடைய முன்னாள் காதலர் சிவபிரகாஷ். இவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.
அப்போது ராகிணி திவேதி தனது காதலன் ரவியுடன் அங்கு வந்தார். ரவி, அரசு அதிகாரியாக பணியாற்றி வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் ஓட்டலில் வைத்து சிவபிரசாத்-ரவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் மூண்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர். பீர் பாட்டிலாலும் தாக்கினர். ஒரு கட்டத்தில் சிவபிரகாஷ் கையால் ரவியின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஓட்டலில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து காதலன் ரவியுடன் அசோக் நகர் போலீஸ் நிலையத்திற்கு ராகிணி சென்றார். அங்கு சிவபிரசாத் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை பதிவு செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lovers ,Ragini Tiwari , presence , actress, Ragini Thavidi, Former-day, lovers,Bengaluru
× RELATED தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரம் காதலர்களுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி