மீனம்பாக்கம்: சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக ஏர் இண்டியா விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது, சென்னையை சேர்ந்த ஜெனிமா பானு (21) என்ற பெண் பயணி திருவனந்தபுரத்தில் விமானத்தில் ஏறி உள்நாட்டு பயணியாக சென்னை வந்தார். அவரை சோதனை செய்தபோது உள்ளாடையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ எடை கொண்ட 4 தங்க கட்டி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி