சென்னை: தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு படை புதிய கமிஷனராக சந்தோஷ் சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை ரயில்வே பாதுகாப்பு படை இயக்குனர் ஏ.கே.அக்னிகோத்ரி நேற்று அறிவித்தார்.இதையடுத்து சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனராக இருந்த லூயிஸ் அமுதன் மத்திய ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட நாக்பூர் கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சந்தோஷ் சந்திரன் தெற்கு ரயில்வே தலைமையகத்தின் ரயில்வே பாதுகாப்பு படை துணை தலைமை கமிஷனராக பதவியில் இருந்து வருகிறார். இவர் வரும் 22ம் தேதிக்குள் தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி