×

பொன்னேரி அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

பொன்னேரி: பொன்னேரி அரசு மருத்துவமனை பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பொன்னேரியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், உடல்நிலை பாதித்தால், இங்குதான் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று தலைமை மருத்துவர் அனுரத்னா, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார்.

அப்போது, பொன்னேரி தாலுகா அலுவலக சாலையை சேர்ந்த ஜீவா (47) என்பவர், தனது நண்பரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவர், வரிசையில் நிற்காமல் நேராக சென்று, சிகிச்சை அளிக்கும்படி அனுரத்னாவிடம் கூறியுள்ளார்.

அதற்கு டாக்டர், ‘வரிசையில் வாருங்கள்’ என்று கூறியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகாத வார்த்தையால் டாக்டரை ஜீவா திட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த அனுரத்னா, இதுகுறித்து பொன்னேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பால்ராஜ் வழக்கு பதிந்து ஜீவாவை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ponneri ,hospital hospital ,woman doctor , Ponneri, government hospital, girl doctor, murder threat, arrest
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு