×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கு எதிராக சக கைதிகள் போராட்டம்

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேருக்கு எதிராக சக கைதிகள் போராட்டம் நடத்தினர். சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் உள்ளனர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இருக்கும் அறையில் 3 பேரையும் அடைக்கக்கோரி போராட்டம் நடத்தினர். காவல்துறை மற்றும் சிறை அதிகாரிகள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின் சக கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,jail ,Coimbatore ,inmates , Pollachi, sexual abuse, prisoners, struggle
× RELATED சிறை மெகா அதாலத்தில் 16 கைதிகள் விடுதலை