×

கட்சி கொடி ஏற்றுவதில் ஒய்.எஸ்.ஆர். காங். - தெலுங்குதேசம் கட்சிகளுக்கு இடையே மோதல்; போலீஸ் துப்பாக்கிச் சூடு

கர்னூல்: ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டம் மந்த்ராலயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கல் கிராமத்தில் தெலுங்குதேசம் வேட்பாளர் திக்காரெட்டி கட்சிக்கொடி ஏற்ற சென்றுள்ளார்.

அப்போது மந்த்ராலயம் சட்டமன்ற உறுப்பினரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான பலாநாயக்க ரெட்டியின் மனைவி கிராம மக்களுடன் சேர்ந்து திக்கா ரெட்டியை தடுத்துள்ளார். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

மோதலை தடுக்க திக்காரெட்டியின் பாதுகாப்பு போலீஸ் வானை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றனர். பதற்றத்தில் அந்த தோட்டா திக்காரெட்டி மற்றும் பாதுகாப்பு போலீசின் காலிலேயே பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒய்.எஸ். விவேகானந்தா ரெட்டியின் கொலையால் ஆந்திராவில் நிலவி வரும் பதற்றத்தை இந்த நிகழ்வு கூட்டியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : YSR ,Confrontation ,Police shoot ,parties , YSR. Congress, Telangana, Andhra, Party flag, gunfire
× RELATED இளைஞர்களை வன்கொடுமை செய்த வழக்கில்...