கொடைக்கானல் : கொடைக்கானல் சுற்றுலா வளர்ச்சிக்கழக தங்கும் விடுதி பகுதியில் பற்றிய காட்டுத்தீயால் மரங்கள், செடிகள் எரிந்து நாசமாயின. கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் தற்போது வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகின்றன. குடியிருப்பு, தங்கும்விடுதி பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களிலும் காட்டுத்தீ ஏற்படுகிறது.
நேற்று மதியம் கொடைக்கானல் சிவனடி சாலை பகுதியில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக தங்கும் விடுதி அருகே திடீரென தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரிப்பால் தீ மளமளவென பரவி அங்கிருந்த மரங்கள், செடிகள் கரு்கி போயின. தகவலறிந்தும் கொடைக்கானல் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். சுமார் 2 மணிநேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி