மங்களூரு : கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரை அருகே ஆராய்ச்சி கப்பலில் தீவிபத்து ஏற்பட்டதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் 16 விஞ்ஞானிகள் உள்பட சுமார் 45 பேர் கப்பலில் இருந்ததாக தெரிவித்துள்ள கடலோர காவல்படை கூறியுள்ளது. மேலும் கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதாகவும், இந்த விபத்தினால் 16 விஞ்ஞானிகள் மற்றும் 30 கப்பல் பணியாளர்கள் காயமின்றி தப்பித்ததாகவும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.தீ விபத்து ஏற்பட்டிட்ட கப்பல் தற்போது மங்களூரு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி