×

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கு : பதுங்கும் அதிமுக விஐபி மகன்கள்...

கோவை: பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் அதிமுக  விஐபி  மகன்கள் பதுங்குவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. கோவை  மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த கல்லூரி மாணவியை கடத்திச்சென்று ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் மற்றும் பல பெண்களை மிரட்டி   வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் விஸ்வரூபம்   எடுத்து வருகிறது. தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகின்றன. இந்த வழக்கில் முக்கிய  குற்றவாளியாக உள்ள திருநாவுக்கரசு, அதிமுக பிரமுகரான ‘பார்’ நாகராஜின் நெருங்கிய நண்பர் ஆவார். கல்லூரி மாணவியின் ஆபாச வீடியோ  மற்றும்  பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ பற்றிய தகவல் அறிந்ததும், ‘பார்’’  நாகராஜ், திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு சென்று அவற்றை சேகரித்துள்ளார். இதை, கொடுக்க மறுத்த சபரிராஜனை மிரட்டி, வாங்கியுள்ளார். சபரிராஜனின் செல்போனில் பதிவாகியிருந்த 25க்கும் மேற்பட்ட வீடியோக்களை   மிரட்டி வாங்கியதாக கூறப்படுகிறது.

 இந்த வீடியோக்களை ‘பார்’ நாகராஜ், பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகரின் இரு மகன்களிடமும் கொடுத்துள்ளார். அவர்கள் இவற்றை பத்திரப்படுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்களை காண்பித்து அவர்கள் பாலியல் விவகாரத்தில்   ஈடுபட்டார்களா? என்பது எனக்கு தெரியாது, ஆனால், வீடியோக்களை அவர்களிடம்   கொடுத்தது உண்மை என்ற தகவலை ‘பார்’ நாகராஜ் பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசனிடம் கூறியுள்ளார். அவர், இந்த தகவலை அவர்,   அதிமுக முக்கிய புள்ளியிடம் தெரிவித்துள்ளார். ‘பார்’ நாகராஜ் தனது மகன்களை இந்த விவகாரத்தில் கோர்த்துவிட்டுள்ளார் என்ற தகவலை அறிந்த, அந்த விஐபி அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி கட்சியின் மேலிடத்துக்கு தகவல்   தெரிவித்தார். இதன் எதிரொலியாக, ‘பார்’ நாகராஜ், கடந்த வாரம் அதிமுகவில்   இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த வழக்கில்  குற்றவாளிகளுக்கு அடைக்கலம்  கொடுத்ததாகவும், குற்றவாளிடமிருந்து பெறப்பட்ட  ஆபாச வீடியோக்களை பதுக்கி வைத்துள்ளதாகவும் அதிமுக முக்கிய புள்ளியின்  மகன்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் இதுவரை இவ்விரு  நபர்களிடமும் விசாரணை நடத்தவில்லை. இதற்கிடையில், வழக்கு  விசாரணைக்கு  பயந்து, இருவரும் பொள்ளாச்சியை விட்டு வெளியேறிவிட்டனர்.  சென்னையில் உள்ள  ஒரு வழக்கறிஞர் உதவியுடன், அங்கு பதுங்கியிருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது.  தனது குடும்பத்தை இந்த வழக்கில் சேர்க்க  காரணமானவராக இருந்தவர் ‘பார்’ நாகராஜ் என்பதால், அவர் மீது அதிமுக முக்கிய  புள்ளி கடும்  ஆத்திரத்தில் உள்ளார். அவரது ஆதரவாளர்களும் ‘பார்’’ நாகராஜை குறி வைத்துள்ளனர். மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வழக்கில், பொள்ளாச்சி அதிமுக முக்கிய  புள்ளியின் இரு மகன்களை, சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் தங்களது  விசாரணை வளையத்துக்குள் ெகாண்டுவந்தால், இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள்  வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இதையே, பாதிக்கப்பட்ட கல்லூரி  மாணவியின் உறவினர்களும் வலியுறுத்துகின்றனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,VIP sons , Pollachi, AIADMAM VIP, sons
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு