×

மோடியின் அரசியல் பதிவு ரீடிவிட் செய்த கிரண்பேடி : முதல்வர் நாராயணசாமி கண்டனம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி  முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில், மக்கள் வாக்களிப்பது மிகவும் முக்கியம் என பதிவு செய்திருந்தார். இதனை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உள்ளிட்ட 3 பேருக்கு டேக் செய்திருந்தார். இதற்கு கவர்னர் கிரண்பேடி நேற்று ரீ டிவிட் செய்துள்ளார். இதுகுறித்து நாராயணசாமி தனது  கண்டனத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். பிரதமருக்கும், பிரதமர் வேட்பாளருக்கும் உள்ள வித்தியாசத்தை கிரண்பேடி புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு பதவியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்யாதீர்கள். உங்கள்  தலைவர் நாட்டின் பிரதமர் மட்டுமே, பாஜகவின் பிரதம வேட்பாளராக நீங்கள் கருதிக்கொள்ளக்கூடாது. ரீ டிவிட் செய்வது தேர்தல்  விதிமீறல், எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Narayanasamy , Kiranpady, Chief Minister Narayanasamy condemned
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...