×

பள்ளி ஆசிரியையிடம் போலீஸ் விசாரணை

அண்ணாநகர்: வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் லோகநாயகி. இந்த பள்ளியில், அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் 4ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் வகுப்பறையில் ஆசிரியை கேட்ட கேள்விக்கு சிறுவன் பதிலளிக்காததால் பிரம்பால் அடித்துள்ளார். சிறுவன் வீடு திரும்பியதும், பள்ளியில் நடந்த சம்பவத்தை தாயாரிடம் கூறி அழுதுள்ளான். அதிர்ச்சியடைந்த பெற்றோர், வில்லிவாக்கம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தனர். போலீசார் பள்ளி ஆசிரியையிடம் விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : school teacher , Police investigate, school teacher
× RELATED அரசு பள்ளி ஆசிரியர் பணி நிறைவு விழா