சென்னை: நங்கநல்லூர் இந்திரா நகரை சேர்ந்த ஹரீஷ் (21) என்பவர், கீழ்கட்டளையை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். புகாரின் பேரில், போலீசார் மாணவியை கடத்திய ஹரீஷை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்தனர்.‘
* பழவந்தாங்கல் பகுதியில் கஞ்சா விற்ற அதே பகுதி பி.வி.நகரை சேர்ந்த வசந்தகுமார் (34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* வேளச்சேரி பைபாஸ் சாலையில் மதுபானம் பதுக்கி விற்ற அதே பகுதி ராஜலட்சுமி நகரை சேர்ந்த வேங்கையன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* தேனாம்பேட் டையை சேர்ந்த சக்திவேல் (40), தனியார் நிறுவனம் ஒன்றில் கொசு மருந்து அடிக்கும் வேலை ெசய்கிறார். அதே பகுதியை சேர்ந்த தீனன் (32) என்பவர் முன்விரோத தகராறில் பீர் பாட்டிலை உடைத்து சக்திவேல் வயிற்றில் குத்திவிட்டு தப்பினார். படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
* பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை வரதராஜபுரம் எம்ஜிஆர் தெருவை சேர்ந்த ராமதாஸ் (40), நேற்று முன்தினம் இரவு தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் போரூர் அருகே சர்வீஸ் சாலையில் சென்றபோது, 7 பேர் கும்பல் அவரை வழிமறித்து, கத்தியால் வெட்டி அவரிடமிருந்த செல்போன், 35 ஆயிரம், பைக் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பினர்.
* அயனாவரத்தை ேசர்ந்த விக்னேஷ் (39) என்பவரின் செல்போனை பறித்துச்சென்ற, நம்மாழ்வார்பேட்டை சுப்பராயன் 4வது தெருவை சேர்ந்த திேனஷ் (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கானத்தூர், இந்திரா காந்தி நகரை சேர்ந்த இசக்கிதுரை (24). நேற்று பைக்கில் கானத்தூரை சேர்ந்த சேகர் (32) என்பவருடன் முட்டுக்காடு அருகே சென்றபோது, மின் கம்பத்தில் பைக் மோதி இசக்கிதுரை இறந்தார்.
* ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற பரமக்குடி, கிறிஸ்துவ தெருவை சேர்ந்த அண்ணாதுரையை (34) போலீசார் கைது செய்தனர்.
* திருவொற்றியூர், பீர்பைல்வான் தர்கா தெருவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட அதே பகுதியில் வசிக்கும் ஜெயிலானி (42) என்ற மாற்றுத்திறனாளி அவரது சித்தி மரியம்பீ (70) ஆகிய இருவரை இரும்பு ராடால் அடித்த அதே பகுதியை சேர்ந்த உசேன் (20), அப்துல்பாருக் (30), சுலைமான் (26), அசேன் (23), பெரோஷ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி