சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் வேலுமணி, சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நேற்று காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதற்கான காரணத்தை டாக்டர்கள் ஆராய்ந்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை முடிவு அடிப்படையில், டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர், மாலையில் அவர் வீடு திரும்பினார். இது வழக்கமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனை என்று டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி