மதுரை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு பற்றி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருப்பிடம் குறித்து கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், மதுரையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க நிலைக்குழு, கண்காணிப்புக்குழு, பறக்கும் படை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 1950 என்ற தொலைபேசி எண் மூலம் வாக்காளர் விவரங்களை அறியலாம் என கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி