×

விதவை அடித்துக் கொலை ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு ஆயுள்

கடலூர்: கடலூர் அருகே விதவை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடலூர் அருகே குடிகாடு கிராமம் ஆற்றங்கரை வீதியை சேர்ந்தவர் விஜயா(32). விதவை. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் விவசாயி கலியமூர்த்தி(38). இவரது மனைவி விஜயலட்சுமி(31). தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களின் வீட்டு கழிவுநீர் விஜயா வீட்டில் பாய்ந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 15.8.2015 அன்று காலை 6 மணிக்கு விஜயா தன் வீட்டிற்கு எதிரில் உள்ள பைப்பில் தண்ணீர் பிடிக்கச் சென்றார்.

அப்போது கலியமூர்த்தி, விஜயலட்சுமி, கலியமூர்த்தியின் அண்ணன் முருகன்(47), அவரின் மனைவி ஜெயா(40), மகன்கள் ஜெகன்(21), அபினேஷ்(19) ஆகிய 6 பேரும் சேர்ந்து செங்கற்களை எடுத்து விஜயாவை தாக்கினர். இதனால் விஜயா உயிரிழந்தார். இதுதொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார்  6 பேரையும் கைது செய்து கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில்  நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். குற்றம்சாட்டப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : widow , Killing the widow In the same family Life for 6 people
× RELATED ஜம்மு காஷ்மீரில் வீர மரணமடைந்த...