புதுடெல்லி: பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்துக்கான இன்று சம்பளம் வழங்கப்படும் என, அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் அனுபம் வஸ்தவா தெரிவித்துள்ளார். மத்திய பொதுத்துறை நிறுவனமான பிஎன்என்எல்லில் 36 தொலை தொடர்பு மாநிலங்கள் உள்ளன. இதில், 1.76 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், பிஎஸ்என்எல் தலைமை அலுவலகமான டெல்லி நிர்வாக பிரிவு அலுவலகம், கேரளா, ஜம்மு காஷ்மீர், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மட்டும் பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக, இதர 32 தொலை தொடர்பு மாநிலங்களில் பணியாற்றி வரும் 1.50 லட்சம் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை நேற்று வரை பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்கவில்லை. இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்று வழங்கப்படும். உரிய நேரத்தில் தலையிட்டு இந்த பிரச்னையை தீர்த்து வைத்த தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு நன்றி என அனுபம் வஸ்தவா கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி