அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கப்படும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி பேசினார். அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மாணவர்களிடம் கலந்துரையாடும் போது, நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்ல முடியாது. வாய்ப்பை பொறுத்து எத்தனை பேருக்கு வழங்க முடியுமோ அதை செய்வோம். ஓடிசா, மேற்கு வங்கத்தில் கட்சிகள் பெண்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது பற்றி ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு, அவர்கள் மாநில கட்சிகள். சுலபமாக முடிவு எடுப்பார்கள். ஆனால் அவர்கள் முறையை கர்நாடக காங்கிரஸ் பின்பற்றுவது கடினம் என்று சித்தராமையா பதிலளித்தார். சட்டம் கொண்டு வந்தால்தான் பெண்கள் உயர் பதவிக்கு வர முடியும் என்பது உண்மைதான். நாடாளுமன்றத்திலும், சட்டபேரவையிலும் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் 24 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று சுட்டிக்காட்டினார் சித்தராமையா.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி