×

பொய்கை ராமாபுரத்தில் எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் : மாடு முட்டி 9 பேர் காயம்

பள்ளிகொண்டா: பொய்கை அடுத்து ராமாபுரம் பகுதியில் நேற்று எருதுவிடும் விழா நடந்தது. இதில் அணைக்கட்டு, வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. இதனை காண சுற்றுபுற கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர்.

இதில், குறிப்பிட்ட தொலைவை வேகமாக ஒடி முதலில் கடந்த காளைக்கு முதல் பரிசாக 55,000, 2ம் பரிசாக 40,000, 3ம் பரிசாக 30,000 என மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டது. மாடு முட்டி இதில் 9 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கேயே உள்ள முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், அணைக்கட்டு தாசில்தார் பெருமாள், மண்டல துணை தாசில்தார் பன்னீர் செல்வம், வருவாய் ஆய்வாளர் தேவிகலா, விஏஓக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், 100க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festival ,Ramamurthi ramuram , poigai, ramapuram, calves
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு