×

பிரேசில் பள்ளியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு 8 பேர் பலி

சா போலோ: பிரேசிலின் சா போலோ நகரில் சுசானோ என்ற இடத்தில் ‘ரால் பிரேசில்’ என்ற  பள்ளி உள்ளது. இங்கு நேற்று காலை பதின்ம வயது இளைஞர்கள் இருவர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சத்தத்தை கேட்டு பள்ளியில் இருந்த மாணவர்களும், ஆசிரியர்களும் பீதியில் வெளியே ஓடினர். துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 5 பேரும், ஆசிரியர் ஒருவரும் பலியாயினர். மேலும், தாக்குதல் நடத்திய இரு இளைஞர்களும் தங்களைத்தாங்களே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தனர்.   இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மொத்தம் 8 பேர் பலியாயினர். மேலும், காயம் அடைந்த 15 மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவர்களின் குடும்பத்தினர் ஏராளமானோர் பள்ளி முன்பு சோகத்துடன் காணப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mariju ,school ,Brazil , Brazil school, gunfire, 8 killed
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா