×

ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி திருநாவுக்கரசு, சபரிராஜன் வாக்குமூலம்

கல்லூரி மாணவி ஆபாச வீடியோ வழக்கின் முதல் குற்றவாளி  திருநாவுக்கரசு, 2வது குற்றவாளி சபரிராஜன் ஆகியோர் பொள்ளாச்சி கிழக்கு  காவல்நிலையத்தில் தனித்தனியாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம்:
* திருநாவுக்கரசு அளித்துள்ள வாக்குமூலம்: கல்லூரி மாணவியை எனக்கு  தெரியாது. சபரியுடன்தான் அவர் பழகியுள்ளார். சபரிதான் அப்பெண்ணை ஆபாச படம்  எடுத்துள்ளார். அந்த படத்தை நான் கேட்டபோது சபரி தரவில்லை. நானும், எனது  நண்பர்கள் சதீஷ், வசந்தகுமார் ஆகியோரும் சபரியை அடித்து, அவனிடம் இருந்து  ஆபாச படங்களை வாங்கினோம். அதன்பிறகுதான், மாணவியை மிரட்ட துவங்கினோம். சபரி  நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளான். ஆபாச படமும் எடுத்துள்ளான். சபரி  மூலமாகத்தான் எனக்கு கல்லூரி மாணவி அறிமுகம் ஆனார்.
* சபரிராஜன்  அளித்துள்ள வாக்குமூலம்: நான் அதிக பெண்களுடன் பழகியுள்ளேன். என்னிடம்  இருந்த வீடியோக்கள் எல்லாம் மிரட்டி எடுக்கப்பட்டது அல்ல. அந்தந்த பெண்கள்  விருப்பப்பட்டு எடுத்ததுதான். என்னை மிரட்டி, என்னிடமிருந்த வீடியோக்களை  திருநாவுக்கரசு வாங்கிக்கொண்டான். அவன்தான் பல பெண்களை மிரட்டி, ஆபாச  வீடியோ எடுத்தான். இதன்பிறகு நான் திருநாவுக்கரசு பக்கமே  போகவில்லை.
இவ்வாறு ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி  வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த வாக்குமூலம் பதிவை பொள்ளாச்சி கிழக்கு  பகுதி போலீசார் சிபிசிஐடி வசம் ஒப்படைத்துள்ளனர். இதன்
அடிப்படையில்  சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

டென்ஷனான எஸ்.பி.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு  நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை சிபிசிஐடி ஐ.ஜி.,  ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் கோவை வந்தனர். கோவை காவலர் விருந்தினர்  இல்லத்தில் இருந்த அவர்களிடம் கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தார்.  அப்போது அவரை சூழ்ந்த பத்திரி கையாளர்கள் வழக்கின் ஆவணங்களை ஒப்படைத்து விட்டீர்களா என கேள்வி எழுப்பினர். அவர் பதிலை பதிவு செய்வதற்காக கேமரா  மற்றும் மொபைல் போன்களை தயார் நிலையில் வைத்திருந்தனர். இதை சட்டை செய்யாமல் எஸ்.பி.பாண்டியராஜன் தனது ஜீப்பிற்கு சென்று உள்ளே இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீரை குடித்து விட்டு, பத்திரிகையாளர்களை பார்த்து, ‘‘காமன்சென்ஸ் இல்லையா உங்களுக்கு... தண்ணீர் குடிப்பதை கூடவா எடுப்பீர்கள்...’’ என சூடாக கேட்டுவிட்டு கிளம்பி சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirunavukkarasu ,Sabarirajan , Thirunavukkarasu, Sabarirajan
× RELATED கடலூரில் ஓய்வு பெற்ற அரசு டாக்டரின்...