×

விஐபி மகன் தலையீடு

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல்  பலாத்காரம் வழக்கில்  சிக்கியுள்ள நான்கு குற்றவாளிகளில் முக்கிய குற்றவாளியாக  இருப்பவர்  திருநாவுக்கரசு (27). இவரின் பண்ணை வீடு,பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீ  தொலைவில் உள்ள சின்னப்பம்பாளையத்தில்  உள்ளது. அங்கு யாரும் இல்லை.  திருநாவுக்கரசு மட்டும் அடிக்கடி அங்கு சென்று  வருவார். இவர், கோவை  அவினாசி ரோடு நவஇந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார்  கல்லூரியில் கடந்த  2016ம் ஆண்டு எம்.பி.ஏ படித்தார். இவரது  குடும்பத்துக்கு பொள்ளாச்சி  சுற்றுவட்டாரத்தில் விவசாய நிலம் மற்றும்  தென்னந்தோப்பு பல ஏக்கரில்  உள்ளது. இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து  திருநாவுக்கரசின் தந்தை  கனகராஜ், பைனான்ஸ் ெதாழில் செய்து வருகிறார். தந்தை  பைனான்ஸ் தொழில்  செய்து வருவதால் திருநாவுக்கரசு, படித்து முடித்ததும் வேறு  எங்கும்  வேலைக்கு செல்லவில்லை. தந்தையுடன் சேர்ந்து, இவரும் பைனான்ஸ் தொழில் செய்து  வந்துள்ளார்.

மேலும்  சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை  எங்கு சென்றாலும் காரில் அழைத்துச் செல்வதை  திருநாவுக்கரசு வழக்கமாக கொண்டுள்ளார். பைனான்ஸ்  தொழில்செய்து  வருவதன் மூலம் கனகராஜ் போலவே, திருநாவுக்கரசும் ஏரியாவில்  பிரபலம்  ஆகிவிட்டார். இவர், உள்ளூரை சேர்ந்த ஆளும்கட்சி முக்கிய  பிரமுகரின் 2வது மகனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, ஏரியாவில் பல பெண்களிடம்  அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவரது குற்றச்செயலுக்கு அந்த விஐபியின் 2வது மகன் உறுதுணையாக இருந்துள்ளார். போலீஸ்  பிடி  இறுகும்போதெல்லாம் இந்த நபர் தலையிட்டு, தனது செல்வாக்கை பயன்படுத்தி  போலீஸ் நடவடிக்கையில் இருந்து  திருநாவுக்கரசு உள்ளிட்ட குற்றவாளிகளை  பலமுறை காப்பாற்றியுள்
ளார்.
ஆரம்பத்திலேயே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை பெண்கள் சீரழிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் எனவும் பொள்ளாச்சி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். ஆனால், ஆளும்கட்சி முக்கிய  பிரமுகரின்  மகன் தலையீடு தொடர்பான எந்த ஆவணங்களும் போலீஸ் கையில் இதுவரை கிடைக்கவில்லை   என்கிறார் பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VIP ,son intervention , Pollachi, college student rape, rape
× RELATED 22 வேட்பாளர்கள் ஆர்ஜேடி அறிவிப்பு: லாலுவின் 2 மகள்களுக்கும் சீட்