×

மோடி மட்டுமே ஒளிர்கிறார்... நாடு இருளில் மூழ்கியுள்ளது : ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம் தொடங்கியது. ராகுல்காந்தி, ஸ்டாலின், வைகோ, கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் இளம் பிரதமராக உள்ளவர் இங்கு வருகை தந்துள்ளார் என ராகுலை குறிப்பிட்டு பேசினார். வர உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி தான் பதவியேற்பார் என ஸ்டாலின் உறுதிபட கூறிடனார். மோடி ஆட்சியில் நாடு ஒளிமயமானதாக இல்லை. இளந்தலைவர் ராகுல் காந்தி அவர்களே, ஒளிமயமான இந்தியாவை தருக என அழைப்பு விடுத்தார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் துணிச்சலோடு அறிவித்தது தாம் தான் என்றார் ஸ்டாலின்.

நாட்டின் அனைத்து துறைகளிலுமே வளர்ச்சி காணப்படவில்லை. தளர்ச்சி மட்டுமே காணப்படுகிறது. பிரதமர் மோடி தான் மட்டும் ஒளிமயமாக இருந்து கொண்டு நாட்டை இருளி் வைத்துள்ளதாக ஸ்டாலின் சாடினார். கண்கட்டி வித்தைக்காரர் போல மோடி செயல்படுவதாகவும், கறுப்பு பணம் குறித்த மோடியின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, கருப்பு பணத்திற்கு பதில் நல்ல பணத்தை மோடி ஒழித்து கட்டிவிட்டார் என்றும் கூறினார். புதுப்புது ஆடைகள், விதவிதமான தொப்பிகள் அணிந்து நாடு நாடாக சுற்றி வருகிறார் மோடி. கடந்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை என்றார்.

ரூ.15 லட்சம் அல்ல ரூ.15,000 கூட மோடி அரசால் மக்களின் வங்கி கணக்கில் செலுத்த முடியவில்லை. மக்களின் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து தற்போது மோடிக்கு விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சியாக உள்ளது. எனவே நல்லாட்சி வழங்கிட காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் கைகோர்ப்போம் என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,country ,Stalin , Congress - DMK, Lok Sabha election, Stalin's speech
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...