×

தேர்தல் பிரசாரம் கேரளாவில் ராகுல் 2 நாள் சுற்றுப்பயணம்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக இன்று கேரளா வருகிறார். மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று கேரளா வருகிறார். நாகர்கோவிலில் இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரசாரத்தில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் வழியாக அவர் எர்ணாகுளம் செல்கிறார். இரவு அங்கு தங்கும் அவர், நாளை திருச்சூரில் மீனவ பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின்னர் இவர் வயநாட்டில், சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் வசந்தகுமாரின் வீட்டிற்கு சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூற திட்டமிட்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் போலீஸ் - மாவோயிஸ்ட் இடையே நடந்த துப்பாக்கிக்சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவர் கொல்லப்பட்டார். ஒருவர் பலத்த காயத்துடன் தப்பிச்ெசன்றார். இந்த சம்பவத்திற்கு மாவோயிஸ்ட் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் ராகுல்காந்தி வந்தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அவர் ராணுவ வீரர் வசந்தகுமாரின் வீட்டிற்கு செல்லும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று உளவுத்துறை போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த சந்திப்பு நிகழ்ச்சியை ராகுல்காந்தி தவிர்த்துள்ளார். நாளை அவர் திருச்சூர் நிகழ்ச்சியை முடித்த பின்னர் காசர்கோட்டில் சமீபத்தில் கொல்லப்பட்ட 2 இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
இதன் பின்னர் மாலை கோழிக்கோட்டில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,tour ,Kerala , Election campaign, Kerala, Rahul
× RELATED கேரளாவில் ராகுல்காந்தி தீவிர வாக்கு சேகரிப்பு..!!