×

திருத்தணி கோயிலில் பூஜை செய்து பிரசாரத்தை தொடங்கினார் ரோஜா

சென்னை: ஆந்திராவில் நடக்க இருக்கும் தேர்தலையொட்டி, திருத்தணி முருகன் கோயிலுக்கு நடிகை ரோஜா குடும்பத்துடன் வந்து வழிபட்ட, பின்னர் ஆந்திராவில் தேர்தல் பிரசாரத்தை துவங்கினார்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலுடன், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 11ம் தேதி முதல் கட்டமாக நடக்க இருக்கும் தேர்தலில், ஆந்திரா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்   தேர்தல் பிரசாரம், அங்கு சூடு பிடித்துள்ளது. அம்மாநில ஆளும் கட்சியாக உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் சாவலாக, பிரதான எதிர் கட்சியான ஓய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான  ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதனால், ஆட்சி யார் பிடிப்பது என்பதில், அங்கு கடும் போட்டி நிலவுகின்றது.

இந்நிலையில்,  ஒய்.எஸ்.ஆர் கட்சி மகளிரணி தலைவியும், நகரி தொகுதி எம்.எல்.ஏ வுமான நடிகை ரோஜா தனது தேர்தல் பிரசாரத்துக்காக, ஆந்திர எல்லையையொட்டி உள்ள,  திருத்தணி முருகன் கோயிலுக்கு நேற்று வந்து குடும்பத்துடன் வழிபட்டார். பின்னர், பிரசார வாகனத்திற்கு பூஜைகள் செய்தார். பின்னர் நேற்றே ஆந்திராவில்   தனது பிரசாரத்தை துவக்கினார்.   சட்டமன்ற தேர்தலுக்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு வாரகாலம் மட்டுமே  உள்ள நிலையில், இதுவரை தெலுங்கு தேசம் கட்சி  தனது வேட்பாரளரை தேர்வு செய்வதில் தாமதம் செய்து வருவதால் ரோஜா  எழுச்சியுடன் பிரசாரத்தை துவக்கியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pujas ,temple ,Tiruttani ,campaign , Tiruttani Temple, Propaganda, Rose
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...