×

முரளிதரராவ் விளக்கம் ஊழல்வாதிகளுடன் கூட்டணி ஏன்?

கோவை: தமிழகத்தில் நீங்கள் எப்படி ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைத்தீர்கள்’ என்ற கேள்விக்கு, ``நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்ததால் இந்த கூட்டணி அமைத்தோம்’’ என்று முரளிதரராவ் பதில் அளித்தார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்னிந்தியா முழுவதும் வேட்பாளர்களின் பெயர்கள் வருகிற 4 அல்லது 5 நாளில் இறுதி செய்யப்படும். பொள்ளாச்சி பாலியல் வழக்கு  தற்போது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த வழக்கில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் பாஜகவும் தமிழக அரசிடம் இந்த  வழக்கு சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளோம். தமிழக பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் ஓரிரு தினங்களில் வெளியிட உள்ளோம். இவ்வாறு முரளிதரராவ் கூறினார். பேட்டியின்போது, `தமிழகத்தில் நீங்கள் எப்படி ஊழல்வாதிகளுடன் கூட்டணி வைத்தீர்கள்’ என்ற கேள்விக்கு, ``நாங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்ததால் இந்த கூட்டணி அமைத்தோம், நாங்கள் எதிர்காலத்தைப் பற்றித்தான் பேசுவோம்’’ என்று பதில் அளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muralidhar Rao , Muralithra Rao, coalition with corrupt politicians,
× RELATED ரஜினிகாந்த் பாஜகவுடன் சேருவார் என்று...